இந்தி நடிகைகளான தனுஸ்ரீதத்தா, கங்கனா ரணாவத், ஜீனத் அமன் உள்ளிட்ட பலர் திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்தி பட நடிகை மஞ்சரி பட்நிஸ் என்பவரும் பாலியல் புகார் கூறியுள்ளார்.

“நான் கடைசியாக தெலுங்கில் நடித்த சக்தி படம் வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. புதிய படங்களில் நடிக்க என்னை அழைத்த இயக்குநர்கள் அவர்களின் படுக்கைக்கும் அழைத்தார்கள். படுக்கையை அவர்களுடன் பகிர்ந்து கொண்டால்தான் பட வாய்ப்பு தருவோம் என்றனர். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

எனது திறனில் எனக்கு நம்பிக்கை உள்ளது. படுக்கையைப் பகிர்ந்து தான் பட வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. இதனால் தான் நான் தெலுங்கு படங்களில் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் என்று இந்தி பட நடிகை மஞ்சரி பட்நிஸ் கூறியுள்ளார்.
இந்த கட்டுரை ஆசிரியரின் கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்துகிறது, ரோஸ்தான் அதை பிரதிபலிக்கிறது அல்லது அதன் காட்சி கருத்துக்களை பிரதிபலிக்கிறது.

Comments
Post a Comment